Offline
டொனால்ட் டிரம்ப் அக்டோபரில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வார்: அன்வார்
By Administrator
Published on 08/01/2025 09:00
News

கோலாலம்பூர்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அக்டோபரில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வார் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார். அன்வார் இன்று காலை டிரம்புடன் ஒரு தொலைபேசி உரையாடலின் போது இந்த விஷயம் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ அக்டோபர் மாதம் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் டிரம்ப் கலந்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சூசகமாகத் தெரிவித்தார்.

மலேசியாவிற்கான புதிய கட்டண வரி விகிதம் நாளை அறிவிக்கப்படும் என்றும் கடவுள் விரும்பினால், அது நமது பொருளாதாரத்திற்கு ஒரு சுமையாக இருக்காது என்று அவர் மக்களவையில் 13ஆவது மலேசியா திட்டத்தை தாக்கல் செய்யும் போது அன்வார் கூறினார்.

Comments