Offline
நுழைவுச் சீட்டை தவறாகப் பயன்படுத்தியதற்காக வெளிநாட்டு பிச்சைக்காரர்கள் KLIA-வில் கைது
By Administrator
Published on 08/13/2025 09:00
News

வெளிநாட்டு பிச்சைக்காரர்கள் தங்கள் நுழைவு அனுமதிச் சீட்டுகளை தவறாகப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டவர்களை மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (AKPS) கைது செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய (KLIA) முனையம் ஒன்றின் புறப்பாடு மண்டபத்திற்கு வெளியே பிச்சை எடுத்துக்கொண்டிருந்த மூன்று வெளிநாட்டினர், இரண்டு அல்ஜீரியர்கள், ஒரு ஈராக்கிய நாட்டவர் கைது செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலை 8.30 மணி முதல் காலை 10.30 மணி வரை AKPS மற்றும் விமான நிலைய பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட ‘KLIAவில் பயணிகளை’ கண்காணிக்கும் நடவடிக்கையின் போது இந்த கைது செய்யப்பட்டது. அவர்களின் நடவடிக்கைகள் நாட்டிற்குள் நுழைவதற்கான விதிமுறைகளுக்கு எதிரானது மட்டுமல்லாமல், நாட்டின் பிம்பத்தையும் பாதித்துள்ளன. மேலும் விமான நிலைய பயனர்களுக்கு அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளன,” என்று அது செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அனைவரும் மேலும் நடவடிக்கைக்காக குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக AKPS மேலும் கூறியது.

Comments