பிரேசிலில், 22 வயது வழக்கறிஞரான லெட்டிசியா பவுல் (Leticia Paul), சிறுநீரகக் கல் பிரச்சனைக்கு, சிடி ஸ்கான் (CT scan) பரிசோதனை மேற்கொண்டபோது, அதில் பயன்படுத்தப்பட்ட ‘கான்ட்ராஸ்ட்’ (contrast) என்ற திரவத்திற்கு ஏற்பட்ட கடுமையான ஒவ்வாமை காரணமாக உயிரிழந்து, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி, ரியோ டோ சூல் (Rio do Sul) நகரிலுள்ள ஆல்டோ வாலே பிராந்திய மருத்துவமனையில் (Alto Vale Regional Hospital) இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
லெட்டிசியா, அனாபிலாக்டிக் ஷாக் (anaphylactic shock) எனும் கடுமையான ஒவ்வாமை பாதிப்புக்கு உள்ளானார். அவசர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.