Offline
Menu
அவளோ உறவுக்காக.. அவனோ விளையாட்டுக்காக..!- ஜாய் கிரிசில்டாவின் புதிய இன்ஸ்டா பதிவு
By Administrator
Published on 09/14/2025 09:00
Entertainment

பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா குறித்த சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

மாதம்பட்டி ரங்கராஜன் ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்து, அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆனாலும், முதல் மனைவியைப் பிரியாமலேயே, ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டதுதான் இந்தச் சர்ச்சைகளின் ஆரம்பம்.

ஜாய் கிரிசில்டா இது தொடர்பாக நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜாய், ரங்கராஜ் தனக்குக் கடன் இருப்பதாகவும், கர்ப்பத்தைக் கலைக்கச் சொன்னதாகவும் முன்னர் பேட்டிகளில் ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார்.

இதைதொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா தாங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வபோது தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜூடன் இருக்கும் புகைப்படங்களை, பதிவுடன் ஜாய் கிரிசில்டா இன்டாவில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில்,” அவள் உயிர் கொடுத்தது ஒரு உறவுக்காக.. அவன் ஆட பார்த்தது ஒரு விளையாட்டுக்கா..” என்றார்.

Comments