Offline
Menu
பிப்ரவரி 9 முதல் சாரா உதவித் திட்டத்தின் கீழ் 100 ரிங்கிட் வரவு வைக்கப்படும்: பிரதமர்
By Administrator
Published on 01/06/2026 09:00
News

புத்ராஜெயா: பிப்ரவரி 9 முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து வயது வந்த குடிமக்களுக்கும் சாரா உதவித் திட்டத்தின் கீழ் 100 ரிங்கிட்  வரவு வைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.

இது ரமலான் தயாரிப்புகள், இந்த ஆண்டு சீனப் புத்தாண்டுக்கானது என்று திங்கட்கிழமை (ஜனவரி 5) புத்ராஜெயாவில் ஒரு சிறப்பு மாதாந்திர உரையில் அன்வார் கூறினார். இதற்கிடையில், சும்பங்கன் துனை ரஹ்மா (STR) மாதாந்திர பெறுநர்கள் ஜனவரி 9 முதல் தங்கள்  அடையாள அட்டை வழி  200 ரிங்கிட்டை பெறுவார்கள் என்று அன்வார் கூறினார். STR கொடுப்பனவுகளின் முதல் கட்டத்திற்கு, தகுதியான மலேசியர்களின் கணக்குகளில் 500 ரிங்கிட் வரவு வைக்கப்படும்.

Comments