வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஜகநாதர், பலதேவர் மற்றும் சுபத்ரா தேவி சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன. இது மலேசியாவின் சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.
பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்களும், சுற்றுலாப் பயணிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். யாத்திரையின் போது பக்தர்களுக்கு இலவச உணவுகள் வழங்கப்பட்டன.
காவல்துறையினர் போக்குவரத்து நெறிமுறைகளைச் சிறப்பாகச் செய்திருந்ததால், பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி யாத்திரையைக் காண முடிந்தது.