இங்கிலாந்தின் சில பகுதிகளில் புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் இன்று காலை எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
விமான நிலையங்களில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இது பழைய கொரோனா வைரஸ் போலத் தீவிரமானது அல்ல என்று நிபுணர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.