ஜப்பானின் வடக்கு பகுதியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் ரிக்டர் அளவில் 6.5 ஆக நிலநடுக்கம் பதிவானது. கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு அது ரத்து செய்யப்பட்டது.
பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.