உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், மலேசியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 10 காசுகள் உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது.
பொருட்களின் விலை உயரும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மானியங்களை முறைப்படுத்துவதே இந்த உயர்வுக்குக் காரணம் என்று நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.