கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் இன்று ஒரு பெண் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், துப்பாக்கி ஏந்திய நபர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் கனடா வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது இந்தப் பயங்கரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பள்ளியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ஒரு நபர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இது தவிர, இந்தப் பெண்ணுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒரு குடியிருப்புப் பகுதியில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்து காணப்பட்டனர். தாக்குதல் நடத்திய பெண் பின்னர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகப் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் சுமார் 25 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தச் சம்பவம் கனடா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அந்நாட்டில் துப்பாக்கிக் கட்டுப்பாடு குறித்த விவாதங்களை மீண்டும் முன்னெடுத்துள்ளது.