இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய், திரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் 2004-ஆம் ஆண்டு வெளியான காவியத் திரைப்படம் 'கில்லி'. தெலுங்குப் படமான 'ஒக்கடு'வின் ரீமேக்காக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு தரணி செய்த மாற்றங்கள் இப்படத்தை ஒரு ஆல்-டைம் ஃபேவரைட் படமாக மாற்றியது. வித்யாசாகரின் இசையில் உருவான பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் முதலிடத்தில் உள்ளன.
கடந்த 2024-ஆம் ஆண்டு 'கில்லி' திரைப்படம் அதன் 20-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது உலகளவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற இமாலய சாதனையை கில்லி படைத்தது. ரசிகர்களின் இடைவிடாத ஆதரவால், இப்படம் மீண்டும் ஒருமுறை திரையரங்குகளில் கொண்டாடப்பட உள்ளது.
வருகிற பிப்ரவரி 20-ஆம் தேதி 'கில்லி' திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான ப்ரீ புக்கிங் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 10 லட்சம் வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதாக அவரது பழைய வெற்றிப் படங்களைத் திரையில் காண்பது ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.