சிரியாவில் நிறுத்தப்பட்டுள்ள தனது அனைத்துப் படைகளையும் திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) வெளியிட்டுள்ள செய்தியின்படி, அங்குள்ள சுமார் 1,000 அமெரிக்க வீரர்களும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியேற உள்ளனர்.
கடந்த ஒரு தசாப்தமாக சிரியாவில் ஐ.எஸ் (ISIS) பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்க ராணுவம் நிலைகொண்டிருந்தது. தற்போது அங்கு அமெரிக்கப் படைகளின் தேவை இல்லை என வெள்ளை மாளிகை கருதுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அல்-ஷத்தாடி (Al-Shaddadi) மற்றும் அல்-தான்ஃப் (Al Tanf) போன்ற முக்கியத் தளங்களில் இருந்து வீரர்கள் ஏற்கனவே வெளியேறத் தொடங்கிவிட்டனர்.
இந்த முடிவு மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அதிகாரச் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிகிறது. அதேசமயம், ஈரான் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில், சிரியாவில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது அமெரிக்காவின் புதிய வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.