ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, அமெரிக்காவுடன் ஒரு "நீதியான மற்றும் சமமான" ஒப்பந்தத்தை எட்டுவதில் ஈரான் உறுதியாக இருப்பதாகத் இன்று தெரிவித்தார். நாளை ஜெனீவாவில் தொடங்கவுள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான மறைமுக அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தத் தருணத்தை ஒரு "வரலாற்று வாய்ப்பு" என்று வர்ணித்துள்ள அரக்ச்சி, இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு திருப்புமுனையாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிந்தால், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வாய்ப்புள்ளதால், சர்வதேச நாடுகள் இதனை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.