பெர்லிஸ் மற்றும் கெடாவின் ஆறு மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு 35°C முதல் 37°C வரை [கடும் வெப்பம் நிலவும்] என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது. குபாங் பாசு, பாடாங் தெராப், போக்கோக் சேனா, சிக், பாலிங் மற்றும் பண்டார் பாரு ஆகிய பகுதிகள் இந்த வெப்ப அலையினால் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்க்க, மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், வெளியில் நடமாடுவதைக் குறைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதே வேளையில், வடக்கு மாநிலங்களில் வெப்பம் அதிகரித்தாலும், சபாவின் சில பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ள அபாயம் நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.