Offline
Menu
MyB2S திட்டத்தின் கீழ் 60,000 மாணவர்களுக்கு இலவச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம்!
By Administrator
Published on 05/13/2026 10:00
News

ஜோகூர் பாருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் ஆகியோர் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

B40 (குறைந்த வருமானம் பெறும்) குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 60,000 படிவம் 4 மற்றும் படிவம் 5 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என்று அவர் சொன்னார்.

இந்த ஆண்டுக்கான இந்த முயற்சிக்கு மலேசிய அரசாங்கம் RM18.5 மில்லியன் ஒதுக்கியுள்ளது.

உரிமம் இல்லாமல் பள்ளிக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டிச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமானது மட்டுமல்ல, அது அவர்களின் உயிருக்கும் ஆபத்தானது. குறிப்பாகப் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு சட்டப்பூர்வமாக உரிமம் பெற்றுத் தருவதில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது.”

மலேசியாவில் ஆண்டுதோறும் சுமார் 6,000 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.

இதில் 65% உயிரிழப்புகள் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கே நேரிடுகின்றன.

உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் 16 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பள்ளி மாணவர்களுக்கான திட்டம் தவிர, பொதுவான MyLesen B2 திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மேலும் 30,000 பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகத் தனியாக RM10.5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் பேசுகையில், இரண்டு அமைச்சுகளுக்கு இடையிலான இந்த கூட்டு முயற்சி, மாணவர்கள் எளிதாகவும் முறையாகவும் உரிமம் பெற உதவும் என்று தெரிவித்தார்.

Comments