மணிலாவில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஆசியான் நாடுகளுடனான அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த சீனா விரும்புவதாகத் தெரிவித்தார். பிராந்திய அமைதியை நிலைநாட்ட வெளிப்புற நாடுகளின் தேவையில்லாத தலையீடு இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.