மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன்காரணமாக மலேசியாவில் மானியமில்லா RON97, RON95 மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சு (MOF) தெரிவித்துள்ளது. எனினும், மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வழக்கமான எரிபொருள் விநியோகம் சீராக இருக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.