Offline
Menu
பறிமுதல் செய்யப்பட்ட பில்லியன் கணக்கான நிதி மக்களுக்குத் திருப்பித் தரப்படும்
By Administrator
Published on 08/31/2026 17:00
News

புத்ராஜெயா: சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பில்லியன் கணக்கான ரிங்கிட் நிதி, குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் மூலம் மக்களுக்குத் திருப்பித் தரப்படும் என பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட நிதியே இந்த நடவடிக்கையில் அடங்கும் என்று அவர் கூறினார்.

“சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் சட்டவிரோத வருமானத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பில்லியன் கணக்கான ரிங்கிட் நிதி அனைத்தும், குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்காக மக்களுக்குத் திருப்பித் தரப்படும் என்பதை இன்று நான் அறிவிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

 புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் (PICC) 69வது தேசிய தின உரையை ஆற்றியபோது அவர் இவ்வாறு கூறினார். நாட்டின் செல்வம் மக்களால் அனுபவிக்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அன்வர் கூறினார். அதே நேரத்தில், நாட்டின் செல்வம் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் சில தரப்பினரால் தவறாகப் பயன்படுத்தப்படுவதையோ அல்லது அனுபவிக்கப்படுவதையோ அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அவர் கூறினார்.

“ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்கள், தங்களைச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று காட்டிக்கொள்ள முயற்சிக்கக் கூடாது,” என்று அவர் கூறினார். மற்ற மலேசியர்கள் அனுபவிக்கும் முன்னேற்றத்தை, தொலைதூர மற்றும் விளிம்புநிலை சமூகங்களில் உள்ள குழந்தைகள் அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் இன்னும் கிடைக்கவில்லை என்றால், சுதந்திரத்தின் அர்த்தம் என்ன என்றும் அன்வர் கேள்வி எழுப்பினார். இனப் பாகுபாடின்றி ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய கவனமும் ஆதரவும் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். “நமக்கு இருப்பது ஒரே தாய்நாடு, மலேசியா,” என்று அவர் கூறினார். “இந்த நாட்டை நாம் மரபுரிமையாகப் பெற்றுள்ளோம், அதன் வெற்றிக்கு நாமே பொறுப்பு.”

Comments