தொடர்ச்சியான வெளிநாட்டுப் பங்கு முதலீடுகளின் வெளியேற்றம் காரணமாக, சிங்கப்பூர் டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.
இன்று புதன்கிழமை (செப்டம்பர் 9) நிலவரப்படி, சிங்கப்பூர் டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 0.2 விழுக்காடு சரிந்து 3.2162 என்ற அளவை எட்டியுள்ளது. இது கடந்த நவம்பர் மாதத்திற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த மதிப்பாகும்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 486 மில்லியன் அமெரிக்க டாலர் (S$615 மில்லியன்) அளவிலான முதலீடுகள் வெளியேறிய நிலையில், செப்டம்பர் மாதத்தில் இதுவரை உலகளாவிய நிதி அமைப்புகள் சுமார் 122 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உள்நாட்டுப் பங்குகளை விற்று வெளியேறியுள்ளன.அ
தே வேளையில், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (MAS) கடுமையான மற்றும் உறுதியான நாணயக் கொள்கை காரணமாகச் சிங்கப்பூர் டாலர் தொடர்ந்து பலமாக நீடித்து வருகிறது.
இந்நிலையில் பிரதமர் அன்வார் இப்ராகிம், எரிபொருள் விலையேற்றத்திற்கு மத்தியிலும் மானிய விலையிலான எரிபொருள் ஒதுக்கீட்டை மீண்டும் வழங்கியுள்ளதால், அது நாட்டின் நிதி நிலையில் ஏற்படுத்தும் தாக்கங்களை முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
அதுதவிர வரவிருக்கும் அக்டோபர் 9-ஆம் தேதி 2027-ஆம் ஆண்டிற்கான கூட்டரசு வரவுசெலவுத் திட்டத்தை (Budget 2027) நாடாளுமன்றத்தில் பிரதமர் சமர்ப்பிக்கவுள்ளார். இது செயற்கை நுண்ணறிவு (AI) துறை சார்ந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் பேங்க் நெகாரா மலேசியாவின் (BNM) கொள்கை முடிவுகள் ஆகியவை வரும் காலங்களில் ரிங்கிட் மதிப்பிற்கு மீண்டும் ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.