Offline
ஆந்திராவில் லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து- 8 பேர் உயிரிழப்பு
Published on 09/15/2024 03:04
News

ஆந்திரா மாநிலம் சித்தூரில் லாரி மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், மொகிலி காட் அருகே சித்தூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில், திருப்பதியில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆந்திர மாநில அரசுப் பேருந்து, லாரி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார்.

நாயுடு சம்பவத்தை பார்வையிட்டார் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

Comments