Offline
இந்து மதத்தை இழிவுப்படுத்தியவர்களுக்கு நடவடிக்கை
Published on 03/05/2025 12:14
News

தைப்பூசம் போது முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட காவடி நடனத்தை கேலி செய்யும் வீடியோ வெளியிட்டது குறித்து எரா எஃப்எம்மின் 3 பாகி எரா நிகழ்ச்சியின் குழுவினர் மன்னிப்பு கேட்டுள்ளனர். அந்த வீடியோவில் டிஜேக்கள் “வேல் வேல்” என்று கோஷமிட்டு சிரித்து, காவடி நடனத்தை பின்பற்றுவதை காட்டினார்கள்.

எரா எஃப்எம் இன்ஸ்டாகிராம் கணக்கில் நபில் அஹ்மத், ஆசாத் ஜாஸ்மின், ராடின் அமீர் மற்றும் அஃபெண்டி அஹ்மத் அருவானி, இந்த வீடியோவுக்காக மன்னிப்பு கேட்டுள்ளனர். அவர்கள் இதை யாரையும் புண்படுத்தும் நோக்கில் செய்யவில்லை என்றும், எதிர்காலத்தில் கவனமாக இருப்பதாக தெரிவித்தனர்.

மிகா துணைத் தலைவர் எம். சரவணன், பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தினார். தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், எம்சிஎம்சி விரிவான விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார்.

Comments