Offline

LATEST NEWS

கடையின் முதல் தளம் இடிந்து விழுந்ததில் பெண் படுகாயம்
Published on 03/09/2025 13:22
News

கோத்த கினபாலு: ஜாலான் செகாமாவில் உள்ள ஒரு கடையின் முதல் தளம் நேற்று இடிந்து விழுந்ததில் ஒரு பெண் படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தில் 51 வயதான பாதிக்கப்பட்டவர் இடிபாடுகளில் நசுங்கி படுகாயம் அடைந்ததாக  சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பு, பாதிக்கப்பட்டவர் பொதுமக்களின் உதவியுடன்  குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று அந்தத் துறை  ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

இரவு 8 மணிக்கு அதன் செயல்பாட்டு மையத்திற்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டது, ஐந்து நிமிடங்கள் கழித்து 13 பணியாளர்களுடன் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. தீயணைப்பு வீரர்கள் ஆய்வு நடத்தி, பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் கட்டடத்தை காலி செய்ய உத்தரவிட்டனர்.

Comments