பெராக் முதல்வர் டத்தோஸ்ரீ சாரானி முகமது, UPSI மாணவர்கள் உயிரிழந்த கெரிக் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இன்று மருத்துவமனையில் சந்தித்து ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தார். உணர்ச்சியால் கண்கலங்கிய முதல்வர், துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு அரசு RM1,000 நிதி உதவியை வழங்கியதாகவும், மருத்துவம் பெறும் மாணவர்களின் உடனடி மீட்சிக்காக பிரார்த்திக்கப்படுவதாகவும் தெரிவித்தார். கௌன்சிலிங் சேவைகளும் வழங்கப்படுவதாக கூறினார்.