தெலுக் மெர்பாவ் தேசியவகை தமிழ் பள்ளி அருகே இரவு 8.50 மணியளவில், பெரோடுவா விவா மற்றும் ஃபோர்டு ரேஞ்சர் வாகனங்கள் மோதிய விபத்தில் 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். மேலும், நான்கு பேர் காயமடைந்தனர். சிப்பாங் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சம்பவ இடத்தை சுத்தம் செய்தனர் என்று உதவி இயக்குநர் அஹ்மத் முகிலிஸ் மொக்தார் தெரிவித்தார்.