கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங், செடனாக் தோட்டத்தில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு RM5,000 நன்கொடை வழங்கி, வருடாந்திர திருவிழாவில் கலந்து சிறப்பித்தார். இந்நிதி, ஆலய மத மற்றும் கலாச்சாரம் சார்ந்த விழாக்களை நடத்த உதவும் என்று அவர் கூறினார். கடந்த ஆண்டில் 17 இந்திய சமூக ஆலயங்களுக்கு மொத்தம் RM59,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தியோ, இனம், மதம், அரசியல் பின்னணி பார்க்காமல் அனைத்து ஆலயங்களுக்கும் உதவுவதாகவும், கூலாய் சமூக நலனுக்காக சேவை செய்ய உறுதி தெரிவித்தார்.