கெரிக் பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நிறுவன பொறுப்புக்கான சட்டம் தேவையென அமைச்சர் அசலினா ஓத்மான் தெரிவித்துள்ளார்.
ஐ.இராச்சியத்தில் உள்ள "Corporate Manslaughter Act" போன்று புதிய சட்டம் கொண்டு வர அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், இது போன்ற விபத்துகளில் நிறுவனங்களும் குற்றப்புலனாய்வுக்கு உட்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
போக்குவரத்து நிறுவனம் மீது விசாரணை நடந்து வருகின்றதாக அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.