Offline
Menu

LATEST NEWS

டுவாஸ் போர்ட்டில் கிரேன் கவிழ்ந்தது – பணிகள் பாதிக்கப்படவில்லை!
By Administrator
Published on 06/18/2025 18:45
News

டுவாஸ் போர்ட்டில் புதிய கிரேன் ஒன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.20 மணியளவில் தரைக்கு கவிழ்ந்தது. இது செயல்பாடற்ற பெரத்தில் நடைபெற்றதாலும், போர்ட் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக ஆணையமும் (MPA), PSA Singaporeயும் தெரிவித்தன.இந்த சம்பவத்தில் யாரும் காயமடைவதோ உயிரிழப்பதோ இல்லை. அருகிலுள்ள சாதனங்கள் மற்றும் கட்டமைப்புகளுக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.இந்தக் கிரேன் கவிழும் விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. டுவாஸ் போர்ட் திட்டம் 2040களில் முழுமையாக முடிவடைந்து, ஆண்டுக்கு 65 மில்லியன் TEU கொண்டெய்னர்களை கையாளும் திறன் பெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

Comments