ஈரான், இஸ்ரேல் மீது கிளஸ்டர் குண்டுகள் கொண்ட ஏவுகணையை கடந்த வியாழன் தாக்கியதாக இஸ்ரேல் இராணுவமும் அதன் வாஷிங்டன் தூதரகமும் தெரிவித்துள்ளன. இது தற்போதைய ஏழு நாட்கள் போரில் கிளஸ்டர் ஆயுதம் பயன்படுத்தப்பட்டது எனக் கூறப்படும் முதல் சம்பவமாகும்.
இஸ்ரேல் தெரிவித்ததாவது, இந்த ஏவுகணை மக்கள் அடர்த்தியாகக் காணப்படும் பகுதியில் விழுந்தது. குண்டுகள் 7 கிமீ உயரத்தில் வெடித்து சுமார் 8 கிமீ சுற்றளவில் சிறு வெடிகுண்டுகளை பறக்கவிட்டதாக கூறப்படுகிறது. இவற்றில் ஒன்று மைய இஸ்ரேலில் உள்ள ஒரு வீட்டில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியது. உயிரிழப்பு ஏற்படவில்லை.
கிளஸ்டர் குண்டுகள் பெரும்பாலும் சரியாக வெடிக்காமல் இருப்பதால், பல ஆண்டுகளுக்குப் பிறகும் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகியவை 2008-ஆம் ஆண்டு கிளஸ்டர் குண்டுகளை தடை செய்யும் சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த நாடுகளாகும்.
இஸ்ரேல், “ஈரான் பொதுமக்கள் மீது எண்ணியெண்ணாத பாதிப்புகளை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டியுள்ளது. ஈரானின் தரப்பில் இதற்கான பதில் இதுவரை வரவில்லை.