ஈரான்-இஸ்ரேல் இடையிலான பதற்றம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அபாஸ் அராக்ச்சி, இஸ்லாமிய கூட்டமைப்புக் கட்சி (OIC) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க இஸ்தான்புலுக்கு வந்தார்.ஈரானை இஸ்ரேல் தாக்கியதை குறித்து கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என அவர் தெரிவித்தார். கடந்த ஜூன் 13-இல் ஈரானின் அணு ஆயுத அபிவிருத்தியை காரணமாக காட்டி இஸ்ரேல் தாக்குதல் நடத்த, அதற்குப் பதிலடி வழங்கியதால், இருநாடுகளுக்கிடையே கடுமையான மோதல் நிலவுகிறது.