அரப்பக்கடல் பகுதியில் இருந்து ரோந்து பணிக்கு புறப்பட்ட இங்கிலாந்து எப்-35 போர் விமானம், எரிபொருள் குறைவால் கடந்த 14ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.எரிபொருள் நிரப்பப்பட்டபோதும், புறப்பட தயாராகிய நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், விமானம் விமான நிலையத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டது.இங்கிலாந்திலிருந்து தொழில்நுட்ப நிபுணர்கள் வருவதற்காக விமானம் ஏற்கனவே 7 நாட்களாக திருவனந்தபுரத்தில் தங்கி உள்ளது. கோளாறு சரியான பிறகே அது புறப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.