டெல்லியைச் சேர்ந்த தன்யா தியாகி, கனடாவின் கால்கரி பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்று வந்தார். இதற்கிடையில், அவர் திடீரென உயிரிழந்துள்ளார். மரண காரணம் மாரடைப்பு எனத் தெரிகிறது, ஆனால் இது குறித்து சந்தேகங்கள் நிலவுகின்றன.தன்யாவின் மரண தகவலை வான்கூரில் உள்ள இந்திய துணை தூதரகம் அவரது பெற்றோருக்கு தெரிவித்தது. தகவல் அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது உடலை இந்தியா கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.இந்திய தூதரகம், தன்யாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்து, தேவையான உதவிகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.சமீப காலமாக, வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் மர்மமாக உயிரிழப்பது அதிகரித்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.