Offline
வெளிநாட்டவர்களைப் பற்றிய கவலை: ஜப்பான் புதிய அரச அமைப்பு தொடக்கம்.
By Administrator
Published on 07/17/2025 09:00
News

ஜப்பானில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மக்கள் மத்தியில் எழும் கவலையை சமாளிக்க புதிய அரச நிர்வாக அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இது குற்றங்கள், கூடுதல் சுற்றுலா மற்றும் நிர்வாக சிக்கல்கள் போன்றவற்றை ஒருங்கிணைந்து கவனிக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது.வேலைவாய்ப்பு குறைபாடு காரணமாக குடியுரிமை சட்டங்களை ஜப்பான் தளர்த்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு 38 இலட்சம் வெளிநாட்டவர்கள் பதிவாகினர். இதை ஒட்டியே, "ஒழுங்கான இணை வாழ்வு" என்ற நோக்கத்தில் குடியுரிமை மாற்றம், சொத்து வாங்கல் ஆகியவற்றில் கடும் விதிமுறைகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.வெளிநாட்டவர்களால் ஏற்படும் சமூகக் கவலைகள், "ஜப்பான் முதன்மை" கொள்கையை முன்வைக்கும் சன்செயிதோ கட்சிக்கு மக்கள் ஆதரவை அதிகரிக்கச் செய்துள்ள நிலையில், ஜூலை 20ஆம் தேதி நடைபெறவுள்ள மேல் சபை தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு சவாலாக அமைந்துள்ளது.

Comments