ஷார்ஜாவில், கேரளா கொல்லத்தைச் சேர்ந்த விபன்சிகா மணியன் (32) மற்றும் அவரது ஒரு வயது மகள் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் கணவர் நிதீஷ் மற்றும் அவரது குடும்பத்துடன் வசித்த விபன்சிகா, பின்னர் தனியாக வாழ்ந்தார். கடந்த 8ஆம் தேதி, அவர்கள் இருவரும் அடுக்குமாடி வீட்டில் மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.மகள் சுவாசம் தடைபட்டு கொல்லப்பட்டதாகவும், பின்னர் விபன்சிகா தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மன அழுத்தம் மற்றும் துன்புறுத்தல் குறித்த ஒரு கடிதமும் அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.விபன்சிகாவின் பெற்றோர், நிதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், அவரது அழகைக் காரணமாகக் கூறி தலைமுடியை மொட்டை அடித்ததாகவும் புகார் அளித்துள்ளனர்.தற்கொலைக்கு தூண்டியதாக நிதீஷ், அவரது சகோதரி மற்றும் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடருகிறது.