Offline
Menu
நோன்புப்பெருநாள் கொண்டாட்டம்: ரந்தாவ் பாஞ்சாங் எல்லையை 7,000 பேர் கடந்தனர்
By Administrator
Published on 03/24/2026 15:00
News

ரமலான் நோன்புப்பெருநாள் பண்டிகையை முன்னிட்டு, பாசிர் மாஸில் உள்ள ரந்தாவ் பாஞ்சாங் குடிநுழைவு, சுங்கவரி, தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகம் வழியாக சுமார் 7,000 மலேசியர்களும் தாய்லாந்து நாட்டினரும் எல்லையைக் கடந்துள்ளனர்.

ஹரி ராயாவிற்கு முந்தைய நாள் சுமார் 3,500 பேரும், பெருநாளின் முதல் நாளில் 3,000-க்கும் மேற்பட்டோரும் எல்லையைக் கடந்துள்ளனர்.

கிளந்தான் மற்றும் தெற்கு தாய்லாந்தில் உள்ள தங்களது உறவினர்களைச் சந்திப்பதற்காகவும், பள்ளி விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா செல்வதற்காகவும் மக்கள் அதிகளவில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பள்ளி விடுமுறை இன்னும் முடிவடையாததால், அடுத்த சில நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரந்தாவ் பாஞ்சாங் எல்லைக் கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்பு முகமையின் (AKPS) துணைத் தளபதி பக்ரி சுலைமான் கூறுகையில், “எல்லையில் போக்குவரத்து நெரிசலின்றி சீராக நடப்பதையும், பாதுகாப்பையும் உறுதி செய்யத் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்,” என்று தெரிவித்தார்.

நேற்று எல்லையைக் கடந்தவர்களின் முழுமையான புள்ளிவிவரங்கள் இன்னும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், ரந்தாவ் பாஞ்சாங் ICQS வழியாகத் தொடர்ந்து மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments