மலேசியாவின் மிக உயரிய மற்றும் மதிப்புமிக்க விருதாகக் கருதப்படும் ‘யாங் டி-பெர்துவான் அகோங்’ கல்வி உதவித்தொகை (BYDPA) 2026-ஆம் ஆண்டுக்காக 14 சிறந்த மலேசிய மாணவர்களுக்கு இன்று வழங்கப்பட்டது.
இஸ்தானா நெகாராவில் (Istana Negara) நடைபெற்ற நல்வாய்ப்பு விழாவில், மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள் மாணவர்களுக்கு இந்த விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள 14 பேரில், 7 பேர் முனைவர் பட்டப் படிப்பிற்காகவும் (PhD), 7 பேர் முதுகலை ஆராய்ச்சிப் படிப்பிற்காகவும் (Master’s by Research) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4 மாணவர்கள் வெளிநாட்டிலுள்ள உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களிலும், எஞ்சிய 10 மாணவர்கள் உள்நாட்டு ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களிலும் தங்களது உயர்கல்வியைத் தொடரவுள்ளனர்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM), செயற்கை நுண்ணறிவு (AI), பொருளாதாரம், இஸ்லாமிய நிதி மற்றும் சட்டம் போன்ற நாட்டின் மூலோபாய வளர்ச்சிக்குத் தேவையான முக்கியத் துறைகளில் இந்த மாணவர்கள் தங்களது ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.
கடந்த 2006-ஆம் ஆண்டு பொதுச்சேவை விடுத்துறையினால் (PSD) தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 239 மலேசியர்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.