Offline
Menu
ஜோகூர் தேர்தல்: காலை மற்றும் பிற்பகலில் பலத்த மழை எச்சரிக்கை; வாக்காளர்கள் திட்டமிட அறிவுறுத்தல்!
By Administrator
Published on 07/11/2026 10:00
News

ஜோகூர் பாரு:

16ஆவது ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் நாளன்று பரவலாக இடிமுழக்கத்துடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) எச்சரித்துள்ளது.

காலை வேளையில் ஜோகூர் பாரு, பத்து பஹாட், கூலாய், மூவார், பொந்தியான் மற்றும் தங்காக் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும். எனினும், மாலை வேளையில் இந்த ஆறு மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று மெட் மலேசியா குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், குளுவாங், கோத்தா திங்கி மற்றும் சிகாமாட் ஆகிய பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், மெர்சிங் பகுதி பிற்பகல் முதல் இரவு வரை இதேபோன்ற வானிலையால் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 33 முதல் 34 பாகை செல்சியஸ் வரை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments