Offline
Menu
அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது!
By Administrator
Published on 07/11/2026 11:00
News

கோலாலம்பூர்:

இந்த வார இறுதியில் அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இன்று மாலை 6 மணி நிலவரப்படி, உள்ளூர் நாணயமான ரிங்கிட் அமெரிக்க டாலருக்கு எதிராக 4.0695/0745 ஆக உயர்ந்தது. நேற்றைய வர்த்தக முடிவில் இது 4.0750/0795 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய இராணுவ மோதல்களுக்கு மத்தியிலும், அமெரிக்கா மற்றும் ஈரானியப் பிரதிநிதிகள் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்வார்கள் என்ற செய்திகளால் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவைக் கண்டுள்ளதாக ‘அம் பேங்க்’ (AmBank) குழுமத்தின் அந்நியச் செலாவணி ஆய்வாளர் யிம் சூன் கா தெரிவித்தார்.

இதனால், முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலரை ஒரு பாதுகாப்பான நாணயமாகக் கருதி வாங்குவது குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.

‘எஸ்பிஐ அசெட் மேனேஜ்மென்ட்’ (SPI Asset Management) நிறுவனத்தின் பங்குதாரர் ஸ்டீபன் இன்னெஸ் கூறுகையில், மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்துள்ளதாலும், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாலும் அமெரிக்க டாலருக்கான தேவை குறைந்து, ரிங்கிட் மீண்டும் மீட்சியடைந்துள்ளது என்றார்.

Comments

More news