காங்கோ மக்களாட்சி குடியரசின் (DRC) கிழக்குப் பகுதியில் பொதுமக்கள் மீது M23 ஆயுதக் குழுவினர் நடத்தி வரும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த மோதல்களால் இதுவரை 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.