Offline
Menu
போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகிய அந்தோணி லோக்
By Administrator
Published on 09/20/2026 16:00
News

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜசெக கட்சியின் பொதுச்செயலாளர் அந்தோனி லோக் போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். சனிக்கிழமை (செப்டம்பர் 19) நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு இதனை அறிவித்த லோக், ஜசெகவை சேர்ந்த மற்ற அமைச்சர்கள் யாரும் பதவி விலக மாட்டார்கள் என்று கூறினார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். அமைச்சரவையிலிருந்து விலகும் இந்த முடிவு தன்னை மட்டுமே சார்ந்திருக்கும் என்றும், பதவியில் உள்ள மற்ற DAP அமைச்சர்களை இது பாதிக்காது என்றும் லோக் குறிப்பிட்டார். ஜசெக தலைமையகத்தில் மூன்று மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

அமைச்சர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள், ஆனால் அமைச்சகம் வழக்கம் போல் செயல்படும். நிலுவையில் உள்ள சில பணிகள் இருப்பதால் எனக்குச் சிறிது காலம் தேவைப்படும்.  இது குறித்து நான் பிரதமருடன் கலந்தாலோசிப்பேன். நிச்சயமாக, ஏற்கெனவே நடைபெற்று வரும் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். ஏனெனில் அமைச்சகத்தின் செயல்பாடுகள் ஒருபோதும் நின்றுவிடாது என்றும் அவர் மேலும் கூறினார்.

Comments