Offline
சிறிய பாட்டில் மினரல் வாட்டர் 10 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்த வியாபாரிக்கு 200 ரிங்கிட் அபராதம்
Published on 10/25/2024 01:00
News

ஒரு சிறிய பாட்டில் மினரல் வாட்டருக்கு (குடிநீர்) 10 ரிங்கிட் வசூலித்தது வைரலான சம்பவத்தை அடுத்து, இங்குள்ள லுகுட்டில் உள்ள ஒரு உணவகத்தின் உரிமையாளருக்கு நெக்ரி செம்பிலான் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் 200 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

சினார் ஹரியான் அறிக்கையில், மாநில இயக்குனர் முஹம்மது ஜாஹிர் மஸ்லான், விலைக் கட்டுப்பாடு மற்றும் லாபம் ஈட்டுதல் தடுப்புச் சட்டம் (AKHAP) 2011 இன் கீழ் உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது என்று கூறினார்.

1.25 லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில்  10 ரிங்கிட்டிற்கு விற்கப்படுவது குறித்து அமைச்சகத்துக்கு பொது புகார் கிடைத்தது. புகாரைத் தொடர்ந்து, போர்ட்டிக்சன் உள்நாட்டு வர்த்தகக் கிளையின் அமலாக்க அதிகாரிகள் குழு புதன்கிழமை (அக் 23) காலை 11 மணியளவில் வளாகத்தை ஆய்வு செய்ததாக  அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, உதவி அமலாக்க அதிகாரி முகமட் ஜைஹிரி தம்பி ஆடம் தலைமையிலான நடவடிக்கை, விற்பனைக்கு வழங்கப்படும் மினரல் வாட்டரின் விலைக் குறியீட்டைக் காட்ட நிறுவனம் தவறியதைக் கண்டறிந்தது. இந்த மீறல் விலைக் கட்டுப்பாடு மற்றும் ஆதாய எதிர்ப்பு (பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணங்களுக்கான விலைக் குறியிடல்) ஆணை 2020க்கு முரணானது என்றும் அவர் கூறினார்.

Comments