இலாசால்வடோர் நாட்டின் முன்னணி மனித உரிமை மற்றும் ஊழல் தடுப்பு வழக்கறிஞர் ரூத் லோபஸ், அரசு பணியாளர் காலத்தில் அரசுப் பொருள்களை மோசடியாக பயன்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூத், ஜனாதிபதி புக்கேலின் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த கிரிஸ்டோசல் அமைப்பின் முக்கிய உறுப்பினர். அவருடைய கைது, மனித உரிமை பாதுகாப்பாளர்களை குற்றவாளிகளாக காட்டும் ஒரு திட்டத்தின் பகுதியாகவே உள்ளது என அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
அதிபர் புக்கேலின் ஆட்சி அவசரநிலையை பயனாக்கி நீதித்துறையை கைப்பற்றி நிரபராதிகளை சிறையில் அடைத்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
ரூத் லோபஸின் வக்கீல் குழுவோடு தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதும், அவரது இருப்பிடம் தெரியாமற்போனதுமே சட்டப்பூர்வமான முறைகளை மீறுவதாக கிரிஸ்டோசல் தெரிவித்துள்ளது.