ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, “நான் ஒருபோதும் அரிசி வாங்குவதில்லை; என் ஆதரவாளர்கள் தருவதால் அது போதுமானது” என தெரிவித்த விவசாய அமைச்சர் டாகு எடோவின் பேச்சை கடுமையாக கண்டித்துள்ளார்.அரிசி விலை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இருமடங்காக உயர்ந்த நிலையில், பொதுமக்கள் அதனால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் எடோவின் இந்தக் கருத்து மக்கள் மனதில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரதமர் இதை "மிகுந்த வருத்தமளிக்கும்" கருத்தாகக் கூறியதுடன், அமைச்சர் தனது பொறுப்பினை நினைவில் கொண்டு விலை உயர்வுக்கு தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.தன்னை மனைவி கூட கேள்வி கேட்டதாக எடோ விளக்கம் அளித்தார்.
“அரிசி நன்கொடை குறைந்துவிடும் போது என் மனைவி தான் வாங்கச் செல்கிறார்,” என்றும் “அதிகமாகவே பேசியுவிட்டேன்” என்றும் எடோ தெரிவித்தார்.2023ல் ஏற்பட்ட கடும் வெப்பம் மற்றும் நிலநடுக்க எச்சரிக்கையால் மக்கள் அதிரடியாக அரிசி வாங்கியதாலேயே இந்த குறைபாடு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.முக்கிய எதிர்க்கட்சியான அரசியல் கட்சியின் செயலாளர் ஜுன்யா ஒகாவா, “இந்த பேச்சு மிகவும் பொருத்தமற்றது, மக்கள் உணர்வுகளுக்கு எதிரானது, பதவியேற்கத் தகுதியற்றது” என கடுமையாக விமர்சித்தார். “இதை சரியாகச் சமாளிக்காவிட்டால் அமைச்சர் பதவியை விலக வேண்டிய நிலை ஏற்படும்” எனவும் எச்சரிக்கை விடுத்தார்.