பிரிட்டனில் இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 23% அதிகரித்து, தற்போது 1,194 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் இணைந்து ப்ராண்ட் தோர்ன்டன் நிறுவனம் வெளியிட்ட “இந்தியா மீட்ஸ் பிரிட்டைன் டிராக்கர்” ஆண்டார் அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.
இந்நிறுவனங்கள் 2024-ம் ஆண்டில் 72.14 பில்லியன் பவுண்ட் வருமானம் ஈட்டியுள்ளன. இது கடந்த ஆண்டின் வருமானமான 68.09 பில்லியனைவிட உயர்ந்தது.
பிரிட்டன் முழுவதும் இந்திய நிறுவனங்கள் 1.26 லட்சம் பேருக்கு வேலை வழங்கி வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் 8,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
விப்ரோ நிறுவனம் 448% வருமான வளர்ச்சி பெற்றதுடன், ஜோஹோ கார்பரேசன் 197% வளர்ச்சி பெற்றுள்ளது