ஈரான் அணு ஆயுத உற்பத்தியைத் தடுக்க கடந்த 13ம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் முக்கிய அணு மையங்கள் சேதமடைந்து, பல விஞ்ஞானர்கள், ராணுவ தளபதிகள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலாக ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் சரணடைய வேண்டும் என கடுமையாக எச்சரித்தார். அதற்கு பதிலளித்த ஈரான் உயர்மட்ட தலைவர் கமேனி, “ஈரான் எப்போதும் போருக்கு தயாராகவே இருக்கிறது; சரணடைய மாட்டோம்” என பதிலடி கொடுத்தார்.
போர் அபாயம் எந்நேரமும் எழலாம் என்ற பயத்தில், அமெரிக்கா தனது விமான தளங்கள், போர்க்கப்பல்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வருகிறது. பக்ரைன் மற்றும் கத்தாரிலிருந்தும் அமெரிக்க போருவிமானங்கள் மற்றும் கப்பல்கள் மற்ற இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இது வழக்கமான நடவடிக்கை அல்ல என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின், இஸ்ரேல்–ஈரான் இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஆனால், டிரம்ப் இதற்கு தொலைபேசியில் எதிர்ப்பு தெரிவித்தார். “முதலில் உக்ரைனில் போரை முடிக்க முயலுங்கள்; பிறகு இந்த பிரச்னையில் தலையிடுங்கள்” என்று டிரம்ப் பதிலளித்துள்ளார்.
தற்போது, இஸ்ரேல்–ஈரான் இடையேயான தாக்குதல்கள் 7வது நாளாக தொடர்கின்றன. அமெரிக்கா –ஈரான் இடையே நேரடி மோதல் எப்போதும் வெடிக்கக்கூடிய சூழ்நிலையில் உள்ளது.