அமெரிக்கா, கடந்த மே மாதத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா பணியை மீண்டும் தொடங்கியுள்ளது.இதற்கான காரணமாக, மாணவர் விசா விண்ணப்பதாரர்களின் சமூக வலைத்தளங்களை ஆய்வு செய்யும் கால அவகாசம் தேவையாக இருந்தது என அமெரிக்க அரசு கூறியது. சமூக வலைத்தள கணக்குகளை அரசாங்க ஆய்வுக்கு திறந்துவிட ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும்; இல்லையெனில், அவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.இந்தக் கணக்குகளில் அமெரிக்காவுக்கு எதிரான பதிவுகள் இருந்தால், அது தாக்கம் செய்யக்கூடும். தூதரக அதிகாரிகள் நேரடியாக இந்த ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.மேலும், 15%க்கும் குறைவான வெளிநாட்டு மாணவர்களை ஏற்கும் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது