Offline
வழிப்பறி கொள்ளைக்கு பலியான மூதாட்டி பலத்த காயம் – பங்சாரில் சம்பவம்
Published on 10/08/2024 02:43
News

பங்சாரில் மோட்டார் சைக்கிளில் வந்த திருடன் ஒருவரின் வழிப்பறி கொள்ளைக்கு பலியாகியதில் மூதாட்டி ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். ஜாலான் லிமாவ் மானிஸில் காலை 6.30 மணியளவில் 78 வயதான பாதிக்கப்பட்ட நபர் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிசிடிவி காட்சிகளில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் அவரது கைப்பையை பறித்துச் சென்றதைக் காட்டியது, இதனால் அவர் சாலையில் விழுந்தார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு சில வழிப்போக்கர்கள் அம்மூதாட்டிக்கு உதவி செய்யும் வரை அவர் சாலையில் அசையாமல் கிடந்தார். ஒரு அறிக்கையில், பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்துறைத் தலைவர் கு மஷாரிமான் கு மஹ்மூத், அந்த மூதாட்டி மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தலையில் கணிசமான இரத்தப்போக்கு இருந்தது. பாதிக்கப்பட்டவர் இன்னும் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்றார்.

கொள்ளைச் சம்பவத்தின் போது தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதற்காக, குற்றவியல் சட்டத்தின் 394ஆவது பிரிவின் கீழ், காவல் துறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார். இந்த பிரிவு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பிரம்படி வழங்கப்படலாம்.

Comments